Sunday, July 20, 2014

ஐ சிவக்குமார் விமர்சனம்

தமிழகத்தில் சோவியத்தின் தகர்வுக்குப் பின்னால் கன்னியா குமரி மாவட்டத்திலுள்ள ஒரு தொழிற்சங்கத்தின் வரலாற்றை இந்நாவல் பதிவு செய்கிறது. நாவலின் மையப் பாத்திரமான அருணாசலம் தொழிற்சங்கச் செயலராய் இருக்கிறான். இவன் ஸ்டாலினிசத்தைத் தன்னுடைய நெறியாகப் பின்பற்றுகிறான். அந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்கனவே தொழிற்சங்கத்தில் பணிபுரிந்த வரும் நல்ல வாசிப்பாளரு மான வீரபத்திரன் எம்.ஏ. பற்றிக் கேள்விப்படுகிறான். அவர் தொழிற் சங்கத்தினரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒரு சந்தை வீதியில் பசியால் உழன்று இறந்துபோன தகவலை ஆறுமுகம் அறிகிறான். வீரபத்திரன் பற்றிக் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் மௌனம் சாதிக்கின்றனர். எஸ்.கே.எஸ். போன்ற தலைவர்கள் அவரைப் பற்றிய ஆவணங்களையே இல்லாமலாக்குகின்றனர்.
ஆறுமுகம் வீரபத்திரனைப் பற்றிய தேடலின் மூலமாக அவருடைய எழுத்துகளை வாசிக்க ஆரம்பிக்கிறான். அப்போது தான் வீரபத்திரன் ட்ராட்ஸ்கி, புகாரின் போன்றவர்களின் பக்கம் இருந்துகொண்டு ஸ்டாலினை விமர்சித்தவர் என்பதை அறிகிறான். ஸ்டாலினை விமர்சித்ததனாலேயே பலரின் தாக்குதலுக்கும் ஆளானார் என்ற தகவலும் கிடைக்கிறது. புகாரின் வாழ்வைப் படிப்பதனால் வீரபத்திரன் அடைந்த குழப்பம், ரஷ்யா மீது அவரடைந்த அதிருப்தி, மனித வாழ்வின்மீது அவருடைய பரிதாபம் எல்லாம் ஆறுமுகத்தையும் தொற்றிக்கொள்கிறது. இந்தச் சமயத்தில் தமிழக மார்க்சிய, எதிர் மார்க்சியம் குறித்து ஞானி, சுந்தரராமசாமி, ஜெயமோகன் முதலானோர் நாவலின் இடை யிடையே வந்து மார்க்சியம் குறித்து விவாதிக்கின்றனர். இந்தத் தளங்களில் பேசப்படும் விவாதங்களும் வாழ்வின் யதார்த்தமும் சேர்ந்து கதைத் தலைவனைப் பைத்தியமாக்குகின்றன. சில வருடங்கள் மனநிலைக் காப்பகத்தில் இருக்கிறான். பின்னர் ஓரளவு கருத்து ‘தெளிவு’ கொண்டபின்னர் தன் மனைவியுடன் கோவிலுக்குச் சென்று சிவலிங்க தரிசனம் பெறுகிறார். பின்னரே அவன் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்படுவதாக நாவல் முடிகிறது.
 ஜெயமோகன் இந்நாவலில் மார்க்சியத்துக்கு எதிரான விவாதங்கள் மூலம் மார்க்சியக் குறைப்பாட்டைப் புலப்படுத்தி ஆன்மீகத்தை வலிந்து நிலைப்படுத்துகிறார். மேற்கத்திய முதலாளித்துவ அரசுகள் ஸ்டாலின் மற்றும் மார்க்சியம் குறித்துச் சித்திரித்த கருத்துகளை உள்வாங்கி, வாசகனை ஈர்க்கும் மொழி தலுடன் ஜெயமோகன் நாவலை உருவாக்கியுள்ளார்.
மே 1937ஆம் ஆண்டு ஜான் டெவே தலைமையில் அமெரிக்கா வில் உள்ள ட்ராட்ஸ்கியவாதிகள் டெவே குழுவை அமைத்தனர். இதன் பணி ட்ராட்ஸ்கி புனிதமானவர் என்பதை நிறுவுவதாகும். இக்குழுவின் அறிக்கைகளைக்கொண்டு எழுதப்பட்டதே இந்நாவல் எனும் கருதுகோளும் உண்டு. ஜெயமோகன் ரஷ்யா, ஸ்டாலின் மற்றும் தொழிற்சங்கம் ஆகியவற்றையே மார்க்சிய மாகச் சித்திரிக் கிறார். ரஷ்யா மற்றும் ஸ்டாலின் மூலம் மார்க்சியத்தின் வீழ்ச்சியையும் அதிகாரத்தையும் நிறுவிச் சிவனையும் விஷ்ணுவையும் வழிபடும் ‘முக்தி’ மார்க்கத்தை ஜெயமோகன் தீர்வாகக் கூறியுள்ளார்.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12226:---1999&catid=1237:2010&Itemid=499

No comments:

Post a Comment